காட்டுத்தீ என்றால் என்ன?
காட்டுத்தீ என்பது பல்வேறு வகையான வானிலை மற்றும் உலர்ந்த காற்று ஆகியவை எரிபொருளாக மாறி காடுகளின் மிகப்பெரிய பரப்பளவை அழிக்கும் நெருப்பு ஆகும். இது அதிகமாக பரவும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஏக்கர் கணக்கான நிலத்தை எரிக்கின்றது மற்றும் அதன் பாதைகளில் உள்ள அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் சாம்பலாக்கி விடுகின்றது . அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 காட்டுத்தீ ஏற்படுகிறது. இதுவரை காட்டுத்தீ காரணமாக 9 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில் இந்த காட்டுத்தீக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
காட்டுத்தீ, வீடுகள் அல்லது விவசாய வளங்கள் போன்ற இடங்களிலும் சரியாக கவனிக்கப்படாமல் தொடங்குகிறது. ஆனால், மரங்கள் மற்றும் வீடுகளை நெருங்கும் போது விரைவாகப் பற்றிக்கொள்கின்றன.
பச்சைவீட்டு விளைவின் காரணமாக வாயு வெளியேற்றம் அதிகரிப்பதனால் காலநிலை வெப்பமடைந்து வருவதால், அடுத்த பல தசாப்தங்களில் மிகப் பெரிய தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயம் வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்று ஒரு புதிய NOAA நிதியுதவி ஆய்வு கூறுகிறது.

காட்டுத்தீக்கான காரணங்கள்
1. உலகின் காட்டுத்தீக்கு முக்கிய காரணமாக மனிதர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த காட்டுத்தீ பலவற்றுக்கான காரணமாக சிகரெட் துண்டுகள் நிலத்தில் விடப்படுவது, கண்காணிக்கப்படாமல் விடப்பட்ட முகாம்கள், வேண்டுமென்றே செய்த தீமூட்டும் செயல்கள் அமைகின்றன. அமெரிக்காவில் 90% காட்டுத்தீ மக்களால் ஏற்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத்தீக்கான காரணங்களில் சில கீழே.
- எரியும் குப்பைகள்: பல இடங்களில் முற்றத்தில் கழிவுகளை எரிப்பது மிகவும் பொதுவானது. அவ்வாறு செய்வது சட்டபூர்வமானது என்றாலும், விஷயங்கள் கையை விட்டு வெளியேறும்போது பல இடங்களில் தீ ஏற்படக்கூடும். காட்டுத்தீயில் காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. எரியும் குப்பைகளின் தீப்பிழம்புகள் காற்றின் மூலம் காடுகள் அல்லது பண்ணைகள் அல்லது வயல்களுக்கு இலகுவாக பரவுகின்றன.
- கவனிக்கப்படாத முகாம்கள்: இளையவர் மற்றும் முதியவர்களுக்கு கேம்பிங் (Camping) மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் போது இரவில் தங்கள் முகாம்களுக்கு அருகில் பாதுகாப்புக்காக பற்ற வைக்கும் நெருப்பு கவனிக்கப்படாத நேரத்தில் காட்டுத்தீயை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே இலகுவாக தீப்பற்றக் கூடிய பொருட்களிலிருந்து விலகி, ஒரு வாளி தண்ணீர் மற்றும் மணல் ஆகிய பாதுகாப்புப் பொருட்களைக் கொண்டிருக்கும் ஒரு கேம்ப்ஃபயருக்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- உபகரணங்கள் அல்லது எஞ்சினின் தீப்பொறிகள்: இயங்கும் இயந்திரங்கள் பழுதாகி தவறாக இயங்கும்போது சூடான தீப்பொறிகளை ஏற்படுத்தலாம். கார் விபத்துக்கள் விரைவாக தீயைத் தொடங்குவதாக அறியப்படுகிறது. அதனால் எரியும் வாகனமொன்றை எதிர்பார்த்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வது பொதுவானது. அந்த வாகனம் ஒரு வயலில் அல்லது காட்டில் இருந்தால் சிறிய எஞ்சின் தீப்பொறிகள் அதிக தீப்பிழம்புகளுக்கு வழிவகுக்கும்.
- சிகரெட்டுகள்: காட்டுத்தீக்கு சிகரெட்டுகள் மற்றொரு பொதுவான காரணம். சிகரெட் இன்னும் எரிகிறது என்பதை அறிந்து மக்கள் தரையில் வீசுவது பொதுவானது. புகைபிடிப்பவர்கள் காட்டும் ஒரு சிறிய அலட்சியம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- பட்டாசுகள்: பட்டாசுகள் வெடிக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கின்றன, ஆனால் அவற்றை வெடிக்க வைக்கும் இடத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காட்டுத்தீ தொடங்க சிறிய வாய்ப்பு இருக்கும்போது கூட பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். சரியாகக் கையாளப்படாவிட்டால், அது தேவையற்ற பிரதேசத்தில் தீப்பிழம்புகளாக முடிவடையும்.
- தீமூட்டுதல்: சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சொத்து, வாகனங்கள் அல்லது வேறு எந்தவொரு பொருளுக்கும் தீ வைக்கும் செயலும் காட்டுத்தீக்கு ஒரு காரணமாகும். இழப்பீட்டைப் பெறுவதற்காக சில சமயங்களில் மக்கள் தங்கள் சொந்த சொத்துக்களுக்கு தீமூட்டுகிறார்கள். அனைத்து காட்டுத்தீ நிகழ்வுகளிலும் இந்த தீமூட்டும் செயல்முறை 30% காரணமாக இருக்கலாம்.
2. இயற்கையால் ஏற்படும் காட்டுத்தீ
- மின்னல்: மின்னல் காட்டுத்தீயை ஏற்படுத்தும். குறிப்பாக “சூடான மின்னல்” எனப்படும் மின்னல் வகை ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நீடிக்கும். அது தாக்கும்போது ஒரு தீப்பொறியை உருவாக்க முடியும், இது ஒரு காடு அல்லது வயலில் நடக்கிறது.
- எரிமலை வெடிப்பு: எரிமலை வெடிப்பிலிருந்து வெளிப்படும் சூடான எரியும் லாவாவும் காட்டுத்தீக்கு காரணமாகிறது.

காட்டுத்தீயின் விளைவுகள்
1. காட்டுத்தீ வீடுகள், வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை அழிக்கின்றது. வனவிலங்கு சூழலில் வசிப்பவர்கள் அனைவரும் இதனால் வீடற்றவர்களாக காணப்படுகிறார்கள். ஒரு பண்ணைக்கு அருகில் அல்லது பிற குடிமக்களின் வயலுக்கு அருகில் காட்டுத்தீ ஏற்பட்டால் அந்த பயிர்கள் பயனற்றதாகப் போய்விடுகின்றன. இந்த சேதங்களை சரிசெய்யவும், வீடுகளையும் தாவரங்களின் பகுதிகளையும் மீண்டும் கட்டவும் மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகின்றன.
2. காட்டுத்தீ பகுதியில் உள்ள மண் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. காட்டில் உள்ள மண், அழுகும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குப்பைகள் மூலம் தாவரங்கள் வளர ஏற்ற இடமாக அமைகின்றது. ஒரு காட்டுத்தீ இந்த மண்ணைத் தாக்கும் போது அது மிகவும் சூடாகி, அந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அழிகின்றன.
3. பல விலங்குகள் உயிரை இழக்கின்றன. பறவைகள், அணில், முயல்கள் மற்றும் பிற வனவிலங்குகள் காட்டுத்தீ ஏற்படும் பொழுது கணிசமான அளவு உயிரிழக்கின்றன.
4. மரங்களும் தாவரங்களும் இல்லாமல் போகின்றன. மரங்களும் தாவரங்களும் உலகில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய உதவுகின்றன. எந்த இடத்தில் குறைந்த மரங்களும் தாவரங்களும் இருக்கின்றதோ அவ்விடத்தில் நாம் சுவாசிக்கத் தேவையான தூய்மையான காற்று குறைவாக உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தாவரங்கள் அல்லது மரங்கள் இல்லாமல் போகும் பொழுது, உயிர் பிழைத்த விலங்குகளுக்கு சாப்பிடவும் எதுவும் இருக்காது.
5. மண்ணில் அதிகப்படியான நீர் அரிப்பு ஏற்படலாம். காட்டுத்தீயை நிறுத்த தீயணைப்பு வீரர்கள் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். மண்ணில் அதிகப்படியான நீர் சேரும்போது அது அரிக்கப்பட்டு பயனற்றதாகின்றது.
6. அதிக அளவு புகை காற்றில் வெளியாகிறது. இதனால் காற்று சுவாசிக்க கடினமாக மாறுகிறது மற்றும் காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.
7. துரதிர்ஷ்டவசமாக, சில மனித உயிர்களும் காட்டுத்தீயில் இழக்கப்படுகின்றன. நெருப்பை எதிர்த்துப் போராடி மற்றவர்களை காப்பாற்ற முயற்சி செய்பவர்களே பெரும்பாலும் உயிரிழக்கின்றனர்.
8. சாம்பல் மற்றும் புகை ஆகியவை, ஒவ்வாமை மற்றும் பிற மருத்துவ சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகை மற்றும் சாம்பல், நுரையீரல் மற்றும் தொண்டையை நிரந்தரமாக சேதப்படுத்தக்கூடும்.
9. காட்டுத்தீயால் வயல் பயிர்கள் மற்றும் விலங்குகள் அழிக்கப்படும் போது விவசாயத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வருமானமும் வேலைகளும் இழக்கப்படுகின்றன. மக்கள் வேலையில்லாமல் இருக்கும்போது பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது.
10. காப்பீட்டுத் தவணைகள் ஒரு காட்டுத்தீக்குப் பிறகு அதிகரிக்கக்கூடும். ஏனெனில், எல்லோரும் இதுபோன்ற பேரழிவு இழப்புகளைத் தடுக்க காப்பீட்டைப் பெற எதிர்பார்க்கிறார்கள். இதனால் பாதிக்கப்படாத மக்களுக்கு காப்பீடு தேவைப்படும்போது அவற்றை வாங்க முடியாத அளவு அதன் தவணைத் தொகை அதிகரித்திருக்கும்.
காட்டுத்தீ வராமல் தடுப்பதற்கான தீர்வுகளை நாம் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.