உலக வரலாற்றின் மிகப்பெரிய மர்மங்கள் பாகம்-2

கடந்த பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் நம் உலகில் நடந்த பல விசித்திரமான மற்றும் மர்மமான நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

1. கோபுரத்தைப் பார்வையிடச் சென்ற இளவரசர்கள்!

1483 ஆம் ஆண்டு கோடை காலத்தில், இங்கிலாந்தின் எட்வர்ட் V மற்றும் ஷ்ரூஸ்பரியின் ரிச்சர்ட் ஆகிய இரண்டு சிறுவர்கள் லண்டனில் காணப்படும் ஒரு கோபுரத்திற்குள் சென்று பூட்டிக்கொண்டனர். அதன் பின் அவர்களை மீண்டும் யாரும் ஒருபோதும் பார்க்கவில்லை. சிலர் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டதாகக் கருதுகின்றனர். அவர்கள் எட்வர்ட் IV மன்னர் மற்றும் அவரது ராணி எலிசபெத் வுட்வில்லின் மகன்கள் ஆவர்.

அவர்கள் தொலைந்ததற்கு பிரதான சந்தேக நபராக ஆரம்ப காலத்திலிருந்தே அவர்களின் மாமா ரிச்சர்ட் III அவர்களையே கூறினர். இருப்பினும், அது கடைசிவரை நிரூபிக்கப்படவில்லை. 1647 ஆம் ஆண்டில், கோபுரத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் இரண்டு சிறிய எலும்புக்கூடுகளைக் கொண்ட ஒரு பெட்டியைக் கண்டுபிடித்தனர். அவை இளவரசர்களுக்கு சொந்தமானவை என்று கருதப்பட்டது. இருப்பினும், புதிய சான்றுகள் இந்த எலும்புக்கூடுகள் ரிச்சர்டுடன் தொடர்புடையவை அல்ல என்று மேலும் ஒரு மர்மத்தை உருவாகியுள்ளன.

2. பளிங்குச் செதுக்கல்கள்!

இந்த நிஜ வாழ்க்கை தொல்பொருள் புதிரை பிந்தைய நாட்களில் ஸ்பீல்பெர்க்கின் “Indiana Jones” என்ற படத்தில் கூட கண்டிருக்கலாம். ஆனால் இது அது அல்ல. மாயா மற்றும் இன்கா நாகரிகங்களில் தோன்றியதாக கூறப்படும் இந்த நீண்ட கால வதந்திகள் பளிங்குகளால் செதுக்கப்பட்ட பல வித்தியாசமான வடிவங்களாகும். இவற்றில் மனித மண்டையோட்டின் செதுக்கல்கள் குறிப்பிடத்தக்கது.

இந்த செதுக்கப்பட்ட பொருட்கள் பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளைக் கொண்டது அல்லது இவற்றை பண்டைய மக்களின் தொழிநுட்ப அறிவை தற்காலிகமாக சேமித்து வைக்க பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவை 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்டவை என்று அறிவியல் ஆராய்ச்சி முடிவு செய்துள்ளது. ஆனால், யாரால் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.

3. ஸ்டோன்ஹெஞ்ச்!

4,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்டோன்ஹெஞ்ச் உலகின் மிக புதிரான பண்டைய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய பிரிட்டனிற்குள் 260 கி.மீ தூரத்திற்கு அந்த பெரிய கற்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டன என்ற கேள்வியைப் போலவே, இந்த நினைவுச்சின்னம் எதற்காக கட்டப்பட்டது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. இருப்பினும், புதிய ஆராய்ச்சி ஸ்டோன்ஹெஞ்ச் பண்டைய புதைகுழிகள் காணப்படும் மற்றும் இறுதி ஊர்வல சடங்குகள் நடத்தப்படும் கட்டமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று காட்டுகிறது.

4. பிரம்மாண்ட NAZCA கோடுகள்!

பெரு நாட்டின் லிமாவுக்கு தெற்கே அமைந்துள்ள நாஸ்காவின் பிரமிக்க வைக்கும் ஜியோகிளிஃப்கள் (நிலத்தில் வரையப்பட்டுள்ள வடிவங்கள்) இன்னும் எந்த தொல்பொருளியலாளர்களாலும் கண்டுபிடிக்கப்படாத மர்மமாகவே உள்ளது. இவை அளவில் மிக மிகப் பிரமாண்டமானவை. இந்த ஜியோகிளிஃப்கள் தனித்துவமான விலங்கு வடிவங்கள் மற்றும் பிற புதிரான உருவங்களை சித்தரிக்கின்றன. அவை எவ்வாறு, ஏன் உருவாக்கப்பட்டன என்பது இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.

5. திருடுபோன அரச நகைகள்!

1907 ஆம் ஆண்டில் ஐரிஷ் கிரீட நகைகள் டப்ளின் கோட்டையிலிருந்து திருடப்பட்டன. தற்போதைய காலத்தில் அவற்றை நாம் கண்டுபிடிக்க முடிந்தால் அதன் பெறுமதி சுமார் 20 மில்லியனாக இருக்கும். புகழ்பெற்ற ஆய்வாளர் எர்னஸ்ட் ஷாக்லெட்டனின் உறவினர் ஒரு முக்கிய சந்தேக நபராக இருந்தபோதிலும், இந்த மர்மம் இதுவரை தீர்க்கப்படவில்லை.

இது போன்ற இன்னும் சில மர்மங்களை நாம் அடுத்த பாகத்திலும் பார்ப்போம்.