பங்குச் சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகிறது?

பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வாங்க மற்றும் விற்க இணையும் இடமாகும். இந்த பங்குகள் பொதுவாக ஒரு நிறுவனத்தின் உரிமையின் பங்குகள் ஆகும்.

வரைவிலக்கணம்: பங்குச் சந்தை என்றால் என்ன?

“பங்குச் சந்தை” என்று சொல்லும்போது எமக்கு ஞாபகத்தில் வருவது பெரும்பாலும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் பெயர் அல்லது நிறுவனங்களின் பங்குச் சந்தை குறியீடுகளில் ஒன்று ஆகும். ஒவ்வொரு பங்குகளையும் கண்காணிப்பது கடினம் என்பதனாலேயே ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன (உதாரணமாக உலகப் புகழ்பெற்ற கோகா கோலா நிறுவனத்தின் குறியீடு NYSE: KO ஆகும்). இந்த குறியீடுகள் பங்குச் சந்தையில் முக்கியமான ஒரு பகுதியாக செயல்பட்டு நிறுவனங்களின் செயல்திறனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பங்குச் சந்தை சரிவடைந்து வருகிறது அல்லது பங்குச் சந்தை நாள் முழுவதும் மூடப்பட்டுவிட்டது என்று செய்தித் தலைப்புகளை நீங்கள் அன்றாடம் காணலாம். பெரும்பாலும் இதன் பொருள், பங்குச் சந்தை குறியீடுகள் மேலே அல்லது கீழ்நோக்கி நகர்ந்துள்ளன, அதாவது அந்த குறியீடுகளுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கூடியுள்ளன அல்லது குறைந்துவிட்டன என்பதாகும். இவ்வகையான இயக்கங்களின் மூலம் பங்குகளின் விலையில் பாரிய மாற்றம் ஏற்படுவதால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் லாபத்தை ஈட்டலாம் என்று நம்புகிறார்கள்.

பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது?

பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிக எளிதாக விளக்கலாம். ஒரு ஏலத்தை போலவே பங்குச் சந்தையும் செயல்படுகிறது. இது பங்குகளை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் விலைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் வர்த்தகம் செய்யவும் உதவுகிறது.

பங்குச் சந்தை, பங்குகள் பரிமாற்றங்களின் வலை போன்று செயற்படுகின்றது. நியூயார்க் பங்குச் சந்தை (NYSE) அல்லது நாஸ்டாக் (Nasdaq) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். முதலில், ஆரம்ப பொது வழங்கல் (IPO) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை ஒரு பரிமாற்றத்தில் பட்டியலிடுகின்றன. முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்குகிறார்கள், இது நிறுவனம் தனது வணிகத்தை வளர்க்க பணம் திரட்ட அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை தங்களுக்குள் வாங்கலாம் மற்றும் விற்கலாம், மேலும் ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட பங்குகளின் வழங்கல் மற்றும் தேவை கண்காணிக்கப்படுகிறது.

அந்த வழங்கல் மற்றும் தேவை, ஒவ்வொரு பங்கின் விலையையும் தீர்மானிப்பதோடு பங்குச் சந்தையின் பங்கேற்பாளர்களான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்குகளை வாங்கும் அல்லது விற்கும் நிலைகளையும் தீர்மானிக்கிறது. இந்த கணக்கீடுகளைச் செய்ய பொதுவாக கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பங்குகளை வாங்குபவர்கள், அவர்கள் செலுத்த விரும்பும் மிக உயர்ந்த தொகையை கூறுகிறார்கள். இது பொதுவாக விற்பனையாளர்கள் பரிமாற்றத்தில் தங்கள் பங்குகளை விற்கும் தொகையை விட குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு ஏலம் கேட்கும் பரவல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வர்த்தகம் நிகழ, வாங்குபவர் தனது விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது விற்பனையாளர் அவரின் விலையைக் குறைக்க வேண்டும்.

முன்னைய காலங்களில், பங்கு வர்த்தகங்கள் ஒரு சந்தையில் நடந்திருக்கலாம், ஆனால் இன்று, பங்குச் சந்தை இணையம் மற்றும் ஆன்லைன் பங்கு தரகர்கள் மூலம் மின்னணு முறையில் செயல்படுகிறது. ஒவ்வொரு வர்த்தகமும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளின் அடிப்படையில் நடக்கிறது. ஆனால், செய்தி, அரசியல் நிகழ்வுகள், பொருளாதார அறிக்கைகள் மற்றும் பிற காரணிகள் ஒட்டுமொத்த பங்கு விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பங்குச் சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது?

நீங்கள் ஒரு வங்கிக் கணக்கு அல்லது தனிப்பட்ட ஓய்வூதிய கணக்கு மூலம் தனிப்பட்ட பங்குகளை வாங்கலாம். இரண்டு கணக்குகளையும் ஒரு ஆன்லைன் தரகரின் மூலம் திறந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்து பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம். உங்களுக்கும் பங்குச் சந்தைகளுக்கும் இடையில் இடைத்தரகராக இந்த ஆன்லைன் தரகர் செயல்படுகிறார்.

எந்தவொரு முதலீட்டிலும் எமக்குத் தெரியாத அபாயங்கள் உள்ளன. அதேபோன்று பங்குச் சந்தையும் வேறு சில ஆவணங்களை விட அதிக ஆபத்தைக் கொண்டுள்ளன. சந்தையின் ஆதாய வரலாறைக் கணக்கிட்டு காலப்போக்கில் இந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் என்று கூறும்போதும் கூட அவை திடீர் சரிவை சந்திக்கின்றன. அதனால், பங்குகளின் விலை மதிப்பைப் பற்றி எப்போதும் நாம் உறுதியான கருத்தைக் கூறிவிட முடியாது.

பல தனிப்பட்ட பங்குகளை வாங்கும் போது குறியீட்டு நிதி அல்லது பரிமாற்ற-வர்த்தக நிதி எனப்படும் ஒரு வகை பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இந்த நிதிகள் ஒரு குறியீட்டில் உள்ள ஏனைய பங்குகள் அல்லது முதலீடுகளை தக்க வைத்துக் கொண்டு குறிப்பிட்ட பங்குகளின் செயல்திறனை மட்டும் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது ஒரு குறியீட்டில் நாம் பங்குகளை வாங்கியிருந்தால் இந்த நிதிகளின் மூலம் அந்த குறியீட்டிலுள்ள மதிப்பு குறைந்த பங்குகளை மட்டும் விற்று விடலாம்.

குறியீட்டு நிதிகள் மற்றும் பரிமாற்ற-வர்த்தக நிதிகள் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு குறியீட்டின் மூலம் பல பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் இவ்வகையான நிதிகள், ஓய்வூதியம் போன்ற நீண்ட கால முதலீட்டிற்கு பொருந்துமே தவிர குறுகிய கால முதலீட்டிற்கு பொருந்தாது (பொதுவாக நீங்கள் முதலீடு செய்த பணத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் எடுக்க நினைத்தால் அது முடியாது). ஒரு குறுகிய கால முதலீடு மற்றும் கடினமான காலக்கெடுவுடன், பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகளை மீட்டெடுப்பதற்கான நேரம் கிடைப்பதற்கு முன் அந்த பணம் உங்களுக்குத் தேவைப்பட அதிக வாய்ப்பு உள்ளது.