வீட்டிலேயே செய்யக்கூடிய 5 அழகு சிகிச்சைகள் பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்த சிகிச்சைகள் போலவே இந்த பாகத்திலும் உங்கள் அழகை பேண மலிவான இயற்கையான சிகிச்சைகள் சிலவற்றை பாப்போம்.

1. தேவையற்ற முக முடிகளுக்கு சர்க்கரை வாக்ஸ் (Wax)

முகத்திலுள்ள தேவையற்ற முடி பல பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய அழகு பிரச்சனையாகும். எனினும், நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சர்க்கரை வாக்ஸ் மூலம் இதனை இல்லாமல் செய்ய முடியும்.

உங்கள் வழக்கமான வாக்ஸ் செய்யும் முறையிலேயே இதையும் செய்ய வேண்டும். அந்த முறை போலவே இந்த சிகிச்சை முறையும் உங்கள் தேவையற்ற முடியை தாற்காலிகமாகவே நீக்க உதவும், நிரந்தரமாக அல்ல.

2. எண்ணெய்த் தன்மையான தோலுக்கு முட்டையின் வெள்ளைக் கரு

எண்ணெய்த் தன்மையான தோல் வேகமாக முதிர்வடைவதில்லை, ஆனால் பராமரிக்க மிகவும் கடினமான தோல் வகையும் இதுவே ஆகும். உடல் தேவையானதை விட அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்யும் போது, அது தோலில் ஒரு பளபளப்பான தோற்றத்தை தருகிறது.

மற்றும், எண்ணெய்த் தன்மையுள்ள தோல் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை ஏற்பட ஏற்ற இறக்கமுடைய ஹார்மோன்களும் காரணமாகையால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

பளபளப்பான எண்ணெய்த் தன்மை கொண்ட முகத்தை மென்மையாக மாற்றுவதற்கு தினமும் உங்கள் முகத்தை சில முறை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சில எளிய வகை சிகிச்சைகளும் உள்ளன.

3. வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்

வறண்ட சருமம் என்பது யாரும் விரும்பத்தகாததொன்றாகும். சருமத்தில் போதுமான ஈரப்பதம் இல்லாவிடின் நமைச்சல், உலர்ந்த தோல் திட்டுக்கள், தோல் செதில்களாக மாறுதல் மற்றும் விரிசல் என்பன ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படுவதை நிறுத்த கடினமாக இருக்கும்போது, தோலின் நிலை இன்னும் மோசமாகக்கூடும்.

தீவிர காலநிலை மாற்றங்களுள்ள இடங்களில் வாழ்தல்; குளிர் காலங்களில் வீட்டினுள் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இருத்தல்; நீண்ட நேர வெந்நீர் குளியல்; குளோரின் அதிகமான குளங்களில் நீச்சல்; கடுமையான சவர்க்காரங்களைப் பயன்படுத்துதல்; சூரிய ஒளியின் தாக்கம் வறண்ட சருமத்திற்கான சில காரணங்களாகும்.

வறண்ட சருமத்தை மென்மையாக்குவதற்கு முறையான ஈரப்பதமூட்டுதல் தேவை. இதற்கு, விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் சமையலறையில் பல இயற்கையாகவே ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன, அவை பயனுள்ள தீர்வுகளை அளிக்கின்றன.

4. கரும்புள்ளிகளுக்கு அப்பச்சோடா

டீன் ஏஜ் பெண்கள் எதிர்நோக்கும் இன்னொரு பொதுவான பிரச்சனையானது, தோலிலுள்ள துளைகளின் அடைப்பினால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகும். எண்ணெய்த் தன்மையுள்ள தோல் மற்றும் பெண்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும்.

தோல் பராமரிப்பு நிபுணர் அல்லது தோல் பற்றிய மருத்துவரை அணுகுவதன் மூலம் இரசாயனங்களையும் சில சிகிச்சைகளையும் பயன்படுத்தி கரும்புள்ளிகளை அகற்றலாம். ஆனால், இந்த தீர்வுகள் விலை உயர்ந்தவை.

அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சில மலிவான தீர்வுகளை முயற்சி செய்யலாம். வீட்டிலுள்ள பொருட்களைப் பயன்படுத்தி தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்யலாம்.

5. பொடுகுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

பொடுகு மற்றொரு கொடூரமான பிரச்சனையாகும். எந்தவொரு வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை இந்த பொடுகு ஆகும். ஆனால் இது 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டோரில் அதிகமாக உள்ளது.

பொடுகுக்கு காரணம் உச்சந்தலையின் தோல் வறட்சியடைவதாகும் மற்றும் இது செதில்களாக மாறி கொட்டும். இந்த செதில்கள் அடர்ந்த நிற உடையில் கொட்டும் போது, மற்றவர் முன்னிலையில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்தோடு தலையில் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சனையை ஒரு ஆரோக்கியமான முடி பராமரிப்பு வழக்கத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதற்கு நீங்கள் சில எளிய இயற்கை வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

இயற்கையாக வரும் நோய்களை இயற்கையாயாலேயே குணப்படுத்துவோம்! முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்