இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்! பாகம் – 2

நாம் கடந்த பாகத்தில் பார்த்தது போலவே இந்த பாகத்திலும் இசையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

1. நீங்கள் கேட்கும் இசைக்கேற்ப உங்கள் இதயத்துடிப்பு மாறுகின்றது.

இசை இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மற்றும் சுவாசம் ஆகியவற்றை மாற்றும் வல்லமை கொண்டது. ஒலி வடிவங்களில் ஏற்படும் மாறுதல்களை ஒரு வளரும் கருவுக்கு கூட தாயின் வயிற்றினுள்ளிருந்தே புரிந்து கொள்ள முடியுமாம்.

2. மகிழ்ச்சியான அல்லது சோகமான இசையை கேட்பதை பொறுத்து நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் விதம் மாறுபடுகிறது.

மூளை எப்பொழுதும் உலகில் என்ன நடக்கிறதென்பதை, கண்கள் வழியாக வரும் தகவலை வைத்து உங்களுக்குத் தெரிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிடுகிறது. அந்த ஒப்பீட்டின் இறுதி முடிவையே நாம் யதார்த்தம் என உணர்கிறோம். ஆகையால், சோகமான பாடல்களை விட மகிழ்ச்சியான பாடல்கள் நீங்கள் உலகத்தை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது.

3. “Earworm” என்பது நீங்களே விருப்பப்பட்டாலும் உங்கள் மனதிலிருந்து நீக்க முடியாத பாடல் ஆகும்.

Earworm என்று உங்கள் மூளையில் ஒரு “அறிவாற்றல் நமைச்சல்” உள்ளது. இந்த “மூளை நமைச்சல்” என்பது, மூளையில் ஒரு பாடலின் தாளத்தின் இடைவெளிகளை நிரப்ப வேண்டியதற்கு தேவையான ஒன்றாகும். உங்கள் மூளையின் புறணிப்பகுதியின் மூலம் ஒரு பாடலின் தாள இடைவெளிகள் தானாக நிரப்பப்படும். இதை எளிதாக கூறுவதானால், உங்கள் மூளை ஒரு பாடல் முடிந்தபின்னும் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருக்கும்.

4. இசை, டோபமைன் (இன்பத்தை தூண்டும் இரசாயனம்) வெளியேறும் மூளையின் அதே பகுதியை தூண்டுகிறது.

உணவின் போதும் உடலுறவின் போதும் டோபமைனை வெளியேற்றுவது உங்கள் மூளையின் உட்கருவின் தொழில்களில் ஒன்றாகும். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இசைமூலம் இந்த உட்கருவின் ஒரு சிறிய பகுதி தூண்டப்படுகிறது. இது மூளையிலுள்ள உணர்ச்சிகளை தூண்டும் அமிக்டாலா எனும் பாகத்தை செயல்படச்செய்கிறது.

5. பார்கின்சன் நோய் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும்பாலும் இசை பரிந்துரைக்கப்படுகிறது.

இசை சிகிச்சை பல தசாப்தங்களாக நடத்தையில் உள்ள ஒன்றாகும். இசை மூளையின் நரம்பணு வலையை சீரமைக்கிறது. இது நேரடியாக மூளையில் மனிதனின் இயக்கத்துக்கும் பேச்சுக்கும் தேவைப்படும் பகுதிகளுக்கு போய்ச்சேர்கின்றது. இதனால் இந்நோயாளிகளுக்கு இசை, அடிப்படை இயக்க திறன்கள் மற்றும் பேச்சு கஷ்டங்கள் ஆகியவற்றை சரி செய்ய உதவுகின்றது.

6. ஒரு ஆய்வின் படி, இசை கருவியொன்றை வாசிப்பதற்கு கற்பதன் மூலம் பகுத்தறிவு திறன்களையும் இயக்க திறன்களையும் மேம்படுத்த முடியும்.

சிறுவர்களைப் பற்றிய ஆய்வுகளில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றவர்களுக்கெல்லாம் இயக்கத் திறன் மற்றும் பகுத்தறிவு திறன்கள் இசை கற்பவரை விட சிறப்பாக அமைந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பேச்சுத்திறன் மற்றும் தர்க்கரீதியான திறன் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர் என கூறப்படுகின்றது.

எனவே, முடிந்தவரை மகிழிச்சியான அழகான இசையை கேட்டு நம் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்போம்! முதல் பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.