துளசியானது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இது இந்திய மருத்துவத்திற்குள் கண் நோய்கள் முதல் வயிற்றுப்புழுக்கள் வரை பல நோய்களுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் வரலாற்றைக் கொண்டுள்ளது.
இலைகள் முதல் விதை வரை, துளசி உடல், மனம் மற்றும் ஆவிக்கு ஒரு மருந்தாக கருதப்படுகிறது. வெவ்வேறு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க தாவரத்தின் வெவ்வேறு பகுதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
உதாரணமாக :
- மூச்சுக்குழாய் அழற்சிக்கு அதன் பூக்களைப் பயன்படுத்தலாம்.
- மலேரியாவுக்கு, இலைகளையும் விதைகளையும், கருப்பு மிளகுடன் பயன்படுத்தலாம்.
- வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி என்பவற்றிற்கு முழு தாவரத்தையும் பயன்படுத்தலாம்.
- அரிக்கும் தோலழற்சிக்கு மாத்திரை மற்றும் எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.
- வயிற்றுப் புண் மற்றும் கண் நோய்களுக்கு சாற்றைப் பயன்படுத்தலாம்.
- பூச்சிகள் ஏதும் கடித்தால் அதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
பல ஆய்வுகள் துளசியின் முழு தாவரத்தையும் மனித பயன்பாட்டிற்காகவும் அதன் சிகிச்சை மதிப்புக்காகவும் ஆதரிக்கின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பும் அதிகமாக உள்ளது. அவையாவன :
- வைட்டமின் ஏ மற்றும் சி (Vitamin A & C)
- கால்சியம் (Calcium)
- துத்தநாகம் (Zinc)
- இரும்பு (Iron)
- குளோரோபில் (Chlorophyll)
மேலே குறிப்பிட்ட மருத்துவப் பலன்கள் மட்டுமல்லாமல் பின்வரும் மருத்துவப் பலன்களையும் துளசி தருகின்றது.
- மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கின்றது.
- தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகின்றது.
- இரத்ததில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது.
- உடலில் அதிக கொழுப்பைக் குறைக்கின்றது.
- வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்கின்றது.
- நெஞ்செரிச்சலை குணப்படுத்துகின்றது.
துளசியைப் பயன்படுத்தும் முறைகளை நாம் இப்போது பார்ப்போம். துளசியின் சாறு கூடுதலாக மாத்திரை அல்லது காப்ஸ்யூல் வடிவத்தில் கிடைக்கிறது. பொதுவான தடுப்பு நோக்கங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 300 மி.கி முதல் 2,000 மி.கி வரை ஆகும். சிகிச்சையாகப் பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட அளவு 600 மி.கி முதல் 1,800 மி.கி வரை நாள் முழுவதும் பல அளவுகளில் எடுக்கப்படுகிறது.
தாவரத்தின் அனைத்து பகுதிகளையும் மேற்பூச்சு களிம்புகளாக அல்லது எண்ணெய்யாக பயன்படுத்தப்படலாம். துளசியின் எண்ணெய் தாவரத்தின் இலைகள் மற்றும் பூக்களிலிருந்து வடிகட்டப்படுகிறது.
இலைகள், பூக்கள் அல்லது உலர்ந்த இலைப் பொடியைப் பயன்படுத்தி துளசி தேநீரையும் செய்யலாம். ஒரு கப் கொதிக்கும் நீரில் 2-3 டீஸ்பூன் துளசியை வைத்து 5–6 நிமிடங்கள் ஊற விடுவதன் மூலம் புதிதாக காய்ச்சிய தேநீர் தயாரிக்கவும் இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம்.
இலைகளை பச்சையாக சாப்பிட்டாலும் பல அதன் சத்துக்கள் கிடைக்கும். இலைகள் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இது காரமான மற்றும் கசப்பான சுவையைக் கொண்டது.
மனித மருத்துவ பரிசோதனைகளின் போது எதிர்மறையான பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், நீங்கள் பாலூட்டுகிறீர்கள், கர்ப்பமாக இருக்கிறீர்கள் அல்லது கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் துளசியைத் தவிர்க்க வேண்டும். துளசி கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கருப்பை சுருக்கங்களைத் தூண்டும் என்று விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.