பெண்கள் தங்கள் தோல், நகங்கள், பற்கள் மற்றும் முடி தொடர்பான அழகு பிரச்சினைகளை சரிசெய்ய அழகு பொருட்களுக்காக நிறைய செலவிடுகின்றனர். பெண்களை கவரும் விதத்தில் சந்தை முழுவதும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், இந்த தயாரிப்புகளில் பலவும் விலை உயர்ந்தவை, நீங்கள் விரும்பும் விளைவை கூட கொடுக்காது.
ஒரு குறைபாடற்ற அழகை பெற, பெரிதளவு செலவிட வேண்டிய அவசியமில்லை. நல்ல முடிவுகளை அளிக்கும் சில அதிசய இயற்கை சிகிச்சைகள் எப்போதும் உள்ளன. உங்கள் அழகைப் பேண இந்த இயற்கை சிகிச்சைகளோடு, நல்ல நிம்மதியான தூக்கம், மன அழுத்த நிலையை குறைவாக பேணுதல் மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளல் மற்றும் உடற்பயிற்சி ஆகியன உதவுகின்றன. இதன் மூலம் உங்கள் வெளி அழகு மட்டுமல்லாது உள் அழகும் பேணப்படுகின்றது.
1. முகப்பருவை போக்க உதவும் பற்பசை

முகப்பரு, வடுக்கள் மற்றும் தோல் முறிவுகள் இளைஞர்களிடையே மிகவும் பொதுவானவை. உண்மையில், இளைஞர்களில் 70 முதல் 87 சதவிகிதத்தினர் இந்த பிரச்சினையைப் பற்றி புகார் கூறுகிறார்கள்.முகப்பரு முகம், மார்பு, முதுகு மற்றும் உச்சந்தலையிலும் தோன்றும். அதிக எண்ணெய் உற்பத்தி, இறந்த சரும செல்கள் திரளுதல், மூடிய துளைகள் மற்றும் பாக்டீரியா ஆகியவை முகப்பருவுக்கு நான்கு பொதுவான காரணிகளாகும். இதனை குணமாக்க பற்பசை மூலம் செய்யக்கூடிய சிகிச்சை இதோ:
- படுக்கைக்குச் செல்வதற்கு முன், பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளைப் பற்பசையை சிறிய அளவில் தடவுங்கள். அடுத்த நாள் காலையில் அதை துடைத்து விடலாம். உங்கள் தோலில் முகப்பரு இல்லாமால் போகும் வரை ஒரு சில நாட்களுக்கு தினமும் மீண்டும் மீண்டும் செய்யவும்.
- உங்களுக்கு இன்னுமொரு சிகிச்சையும் அறியத் தருகின்றோம். கற்றாழையிலுள்ள ஜெல்லும் மென்மையான மற்றும் மிதமான முகப்பருவிற்கும் சிறந்தது. ஒரு கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் 2 அல்லது 3 முறை தினமும் தடவவும். கற்றாழையின் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.
2. உதடு வெடிப்புக்கு உதவும் சர்க்கரை
அழகு என்று வரும்போது, உங்கள் உதடுகளை நீங்கள் வெறுமனே புறக்கணிக்க முடியாது. மென்மையான, இளஞ்சிவப்பு உதடுகள் உங்கள் முகத்தின் அழகை அதிகரிக்கின்றன, பட்டுப்போய், வறண்ட உதடுகள் உங்கள் ஒட்டுமொத்த அழகை கெடுத்துவிடும்.
விலை குறைந்த தரமற்ற உதடு பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர, நேரடி சூரிய ஒளியின் அதிகப்படியான தாக்கம், அதிகப்படியான புகைபிடித்தல், உயர் காஃபின் (Caffeine) உட்கொள்ளல் மற்றும் ஹார்மோன் சமநிலைகள் ஆகியவை வறண்ட மற்றும் கருத்த உதடுகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் உதடுகளின் மென்மை மற்றும் இயற்கை இளஞ்சிவப்பு வண்ணத்தை மீண்டும் பெற்று உங்கள் அழகான புன்னகையை மீளப்பெற, இந்த சர்க்கரை சிகிச்சையை முயற்சி செய்யுங்கள்.
- 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து, வாரம் ஒரு முறை மெதுவாக உங்கள் உதடுகளில் இரண்டு நிமிடங்களுக்கு தடவ வேண்டும். இது இறந்த சரும செல்களை நீக்கி உதடுகளை மென்மையாக்க உதவுகிறது.
- உங்கள் உதடுகளை எப்பொழுதும் ஈரமாக வைத்திருப்பதற்கு, மென்மையான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயை ஒருமுறை அல்லது இரண்டு முறை தினமும் மசாஜ் செய்யலாம்.
3. மஞ்சள் கரை படிந்த பற்களுக்கு அப்பச்சோடா

ஒரு பிரகாசமான அழகான புன்னகைக்கு முத்து போன்ற வெள்ளை நிறமான பற்களை பராமரிப்பது முக்கியமாகும். உங்கள் பற்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு நல்ல வாய்வழி சுகாதாரம் அவசியமாகும்.
எனினும், பரம்பரை காரணிகள், தேயிலை அல்லது காபி அதிகப்படியான நுகர்வு, அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் மாறுபட்ட நீர் உபயோகம் ஆகியவை பற்களால் கரைக்கப்பட்டு அவற்றை மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கச் செய்கின்றன.
சந்தையில் பல பற்களை வெளுக்கச் செய்யும் பொருட்கள் உள்ளன அல்லது உங்கள் பல் மருத்துவரிடம் வெளுத்தும் சிகிச்சையைத் தேர்வு செய்யலாம். ஆனால் இந்த விருப்பத்தேர்வுகள் உங்கள் பணச்செலவை அதிகமாக்கலாம்.
ஒரு அழகான புன்னகையை பெற சில எளிமையான மற்றும் மலிவான இயற்கை வீட்டு வைத்தியம் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
- வெறுமனே ¼ தேக்கரண்டி அப்பச்சோடாவை உங்கள் பற்பசையோடு ஒரு சிறிய பட்டாணி அளவு கலந்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை மெதுவாக உங்கள் பல்லை துலக்குங்கள். அப்பச்சோடாவின் சிராய்ப்பு தன்மை பற்களின் மேற்பரப்புக்கு உதவுவதோடு கறைகளை அகற்றவும் உதவும். இந்த சிகிச்சையை பயன்படுத்திய பின் எதுவும் சாப்பிட அல்லது குடிக்க வேண்டாம் என்பதை மனதில் கொள்ளவும்.
- மற்றொரு நல்ல சிகிச்சை என்னவெனில் ஒரு வாரத்திற்கு தூங்குவதற்கு முன், ஒவ்வொரு நாளும் உங்கள் பற்கள் மீது புதிய ஆரஞ்சு தோலை (தோலின் உள்பகுதி) தேய்க்க வேண்டும். உங்கள் பற்கள் மீதுள்ள மஞ்சள் நிற குறைப்பைக் குறைக்கக்கூடிய தன்மை ஆரஞ்சு தோலில் உள்ளன.
4. எண்ணெய் தன்மை கொண்ட கூந்தலுக்கு பேபி பவுடர்

எண்ணெய் தன்மையுள்ள கூந்தல் உங்கள் அழகை குறைக்கவல்லது. அத்தோடு, இது தலைவலி மற்றும் தலை பொடுகு மற்றும் அரிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
சில எண்ணெய் தன்மையுள்ள கூந்தல் பிரச்சினைகளை உங்கள் வழமையான முடி பராமரிப்பு மற்றும் எளிமையான சிகிச்சைகள் மூலம் வீட்டிலேயே எளிதாக சரி செய்ய முடியும்.
- உதாரணமாக, நீங்கள் அடிக்கடி உங்கள் கூந்தலை கழுவ வேண்டுமென்றால் சூடான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். சூடான தண்ணீர் சரும உற்பத்தியை தூண்டுகிறது, இதன் விளைவாக உங்கள் தலைமுடியின் அதிகப்படியான எண்ணெய்யை கரைத்து விடலாம்.
- மேலும், முடியை சீவ விசேடமான தூரிகையை (Hair Brush) பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தலின் மேற்பரப்பிலுள்ள எண்ணெய் முடியின் வேர் வரை போகக்கூடும். அதற்கு பதிலாக, உங்கள் முடியை சீவுவதற்கு எளிமையான சீப்பை பயன்படுத்தலாம்.
- சில நாட்களில் நீங்கள் குளிக்க முடியாமல் போகலாம். ஆனால் கூந்தலில் ஒரு விரைவான திருத்தம் தேவைப்படும்போது, அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவும் ஒரு பேபி பவுடரை பயன்படுத்தலாம். உங்கள் கைகளில் சிறிதளவு பேபி பவுடரை எடுத்து அதை உங்கள் முடியில் தடவிடுங்கள். பிறகு மெதுவாக உங்கள் முடியை சீவ எண்ணெய் தன்மை நீங்கும்.
5. வீக்கமான கண்களுக்கு குளிரான கரண்டி

எவரிலும் தூங்கி எழுந்தபின் கண்கள் வீக்கமாகவும் கண்களின் கீழ் கருவளையமும் காணப்படலாம். இது பல காரணிகளால் ஏற்படுகிறது.
மிகவும் பொதுவான காரணிகளாக அழுகை, தாமதமான இரவுத்தூக்கம், அதிக மனஅழுத்தம், மரபியல் காரணிகள், உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள், தூக்கம் இல்லாமை என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த அழகுப் பிரச்சனைக்கு, சில எளிமையான மற்றும் இலகுவான வழிகள் உள்ளன.
- 15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் ஒரு உலோக கரண்டியை வைத்து அது முழுமையாக குளிர்ந்திருக்கும் வரை வைக்க வேண்டும். பின் 1 நிமிடம் உங்கள் வீக்கமான கண்களில் கரண்டியின் குளிரான மேற்பரப்பை வைக்க வேண்டும். பின்பு மற்றொரு குளிரற்ற கரண்டியை மீண்டும் கண்களில் வைக்கவும். குளிர்ந்த வெப்பநிலை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து இரத்தக் குழாய்களைத் தளர்த்த உதவுகிறது. இது கண் வீக்கத்தை அகற்ற உதவுகிறது.
- மற்றொரு சிகிச்சை முறையானது, 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் நீங்கள் பயன்படுத்தப்படும் பச்சை அல்லது கருப்பு தேநீர் பைகளை வைக்கவும். பின் அதை எடுத்து 10 நிமிடங்களுக்கு உங்கள் மூடிய கண்ணிகளில் அவற்றை வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சில முறை செய்யவும். தேயிலையின் எரிச்சல் இல்லாமாக்கும் தன்மை கண் வீக்கத்தை குறைக்க உதவும். இந்த சிகிச்சையின் மூலம் கருவளையங்களை இலகுவாக போக்கலாம்.
- வீக்கமான கண்களுக்கு மற்றொரு செலவு குறைந்த தீர்வாக குளிர்ந்த வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் மூடிய கண்ணிமைகளில் 10 நிமிடங்கள் ஒரு நாளுக்கு சில தடவைகள் வைக்க வேண்டும். வெள்ளரிக்காய்களின் இயற்கையான ஈரத்தன்மை உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
இன்னும் சில அழகு சிகிச்சைகளை நாம் அடுத்த பாகத்தில் பாப்போம். இரண்டாவது பாகத்தை படிக்க இங்கே அழுத்தவும்.